என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 மாநில தேர்தல்: சோனியா பிரசாரம் செய்வாரா?
Byமாலை மலர்18 Jan 2017 6:20 AM GMT (Updated: 18 Jan 2017 6:20 AM GMT)
5 மாநில தேர்தலுக்காக சோனியாகாந்தி பிரசாரம் செய்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவருடைய உடல்நிலையை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம் என்று திக்விஜய்சிங் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கி விட்டன.
ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேரடியாக சென்று பிரசாரம் செய்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். டெல்லி ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆபரேசனும் நடந்தது.
இதன்பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே சோனியா பங்கேற்றுள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் உள்பட வேறு எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் அவர் பிரசாரம் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பிரசாரம் செய்தால் தான் கட்சிக்கு பலமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி அனைத்து மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். சோனியாகாந்தி பிரசாரம் செய்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவருடைய உடல்நிலையை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம். ஆனாலும் பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கி விட்டன.
ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேரடியாக சென்று பிரசாரம் செய்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். டெல்லி ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆபரேசனும் நடந்தது.
இதன்பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே சோனியா பங்கேற்றுள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் உள்பட வேறு எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் அவர் பிரசாரம் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பிரசாரம் செய்தால் தான் கட்சிக்கு பலமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி அனைத்து மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். சோனியாகாந்தி பிரசாரம் செய்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவருடைய உடல்நிலையை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம். ஆனாலும் பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X