search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியப் பிரதேசத்தில் ரெயில் மோதி சிறுத்தை பலி
    X

    மத்தியப் பிரதேசத்தில் ரெயில் மோதி சிறுத்தை பலி

    மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுத்தை ரெயில் மோதி உயிரிழந்தது.
    இந்தூர்:

    மத்தியப் பிரதேசம் மாநிலம், உமாரியா மாவட்ட வனப்பகுதியில் வாழ்ந்து வந்த அந்த சிறுத்தை இன்று அதிகாலை இங்குள்ள குங்குட்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றது.

    அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ரெயில் சிறுத்தையின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த சிறுத்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.

    இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த வனத்துறையினர் சிறுத்தையின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    Next Story
    ×