search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி ஆகும் நோக்கம் இல்லை: காங்கிரசில் சேர்ந்த சித்து அறிவிப்பு
    X

    முதல்-மந்திரி ஆகும் நோக்கம் இல்லை: காங்கிரசில் சேர்ந்த சித்து அறிவிப்பு

    மாநிலத்துக்கு முதல்-அமைச்சராகும் நோக்கம் இல்லை என்று தெரிவித்த சித்து, காங்கிரஸ் தலைமை தேர்வு செய்யும் யாருடைய தலைமையின் கீழும் பணி செய்ய தயார் என்று கூறினார்.
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, நேற்று முன்தினம் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். காங்கிரசில் இணைந்த பிறகு முதல் முறையாக நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், ‘நான் பிறவியிலேயே ஒரு காங்கிரஸ்காரன். தற்போது என்னுடைய வேர் அமைப்புக்கு மீண்டும் வந்துள்ளேன். அந்தவகையில் இது என்னுடைய ‘கார்வாப்சி’. பாதல் அரசின் தவறான நிர்வாகத்தில் இருந்து பஞ்சாப்பை விடுவித்து அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் மாநிலத்தை வழிநடத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    மாநிலத்துக்கு முதல்-அமைச்சராகும் நோக்கம் இல்லை என்று தெரிவித்த சித்து, காங்கிரஸ் தலைமை தேர்வு செய்யும் யாருடைய தலைமையின் கீழும் பணி செய்யவும், எந்த தொகுதியிலும் போட்டியிடவும் தயார் என்று கூறினார். பஞ்சாப்பை தனது பழைய செழுமைக்கு மீட்டெடுப்பதே தனது நோக்கம் என்று கூறிய அவர், வேறு தனிப்பட்ட செயல்திட்டம் எதுவும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார். 
    Next Story
    ×