என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் அறிக்கை வெளியீட்டுடன் 19-ம் தேதி பிரசாரத்தை தொடங்கும் அகிலேஷ் யாதவ்
Byமாலை மலர்16 Jan 2017 10:13 AM GMT (Updated: 16 Jan 2017 10:13 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வரும் 19-ம் தேதி சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதிவரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இங்கு அரசியல் காய்நகர்த்தல்கள் படுவேகமாக நடந்து வருகின்றன. மாநிலத்தில் இழந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முந்தைய ஆளும்கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தற்போதைய ஆளும்கட்சியான சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலை தனித்து சந்திக்கும் மாயாவதி மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த வாரமே வெளியிட்டார்.
இவற்றுக்கிடையே, இம்மாநிலத்தில் தங்களது புதுக்கணக்கை துவங்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், பழைய கணக்கை புதுப்பிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.
இதனால், இங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் மாநில முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் இடையிலான கவுரவ பலப்பரீட்சையில் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு? என்பதில் போட்டாப்போட்டி ஏற்பட்டது.
இவ்விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த உட்கட்சி பூசலால் தேர்தல் பிரசாரத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் அடியெடுத்து வைக்காமல் இருக்கிறது.
இந்நிலையில், தந்தை முலாயமுடன் உச்சகட்ட மனக்கசப்பில் இருக்கும் அகிலேஷ் யாதவ் வரும் 18-ம் தேதியன்று மாநிலம் முழுவதும் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கிறார். அன்றைய தினமே கட்சியின் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிடுகிறார்.
பின்னர், 19-ம் தேதி ஆக்ரா மற்றும் அலிகர் நகரில் நடைபெறும் இரண்டு தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கும் அகிலேஷ், அங்கிருந்து தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்துகொண்டு, தொகுதி பங்கீடும் செய்ய தீர்மானித்துள்ள அகிலேஷ், முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதிவரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இங்கு அரசியல் காய்நகர்த்தல்கள் படுவேகமாக நடந்து வருகின்றன. மாநிலத்தில் இழந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முந்தைய ஆளும்கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தற்போதைய ஆளும்கட்சியான சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலை தனித்து சந்திக்கும் மாயாவதி மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த வாரமே வெளியிட்டார்.
இவற்றுக்கிடையே, இம்மாநிலத்தில் தங்களது புதுக்கணக்கை துவங்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், பழைய கணக்கை புதுப்பிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.
இதனால், இங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் மாநில முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் இடையிலான கவுரவ பலப்பரீட்சையில் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு? என்பதில் போட்டாப்போட்டி ஏற்பட்டது.
இவ்விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த உட்கட்சி பூசலால் தேர்தல் பிரசாரத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் அடியெடுத்து வைக்காமல் இருக்கிறது.
இந்நிலையில், தந்தை முலாயமுடன் உச்சகட்ட மனக்கசப்பில் இருக்கும் அகிலேஷ் யாதவ் வரும் 18-ம் தேதியன்று மாநிலம் முழுவதும் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கிறார். அன்றைய தினமே கட்சியின் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிடுகிறார்.
பின்னர், 19-ம் தேதி ஆக்ரா மற்றும் அலிகர் நகரில் நடைபெறும் இரண்டு தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கும் அகிலேஷ், அங்கிருந்து தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்துகொண்டு, தொகுதி பங்கீடும் செய்ய தீர்மானித்துள்ள அகிலேஷ், முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X