என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: என்கவுன்ட்டரில் இன்று 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
Byமாலை மலர்16 Jan 2017 3:44 AM GMT (Updated: 16 Jan 2017 3:44 AM GMT)
காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாஹல்காம் நகரை ஒட்டியுள்ள அவோரா என்ற கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறையின் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையின் மூன்றாவது ராஷ்டரிய ரைபிள்ஸ் வீரர்கள் அந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டை நேற்று மாலை சுமார் 5 மணியளவில் சுற்றிவளைத்தனர்.
அந்தப் பகுதியை பிறபகுதிகளுடன் இணைக்கும் நாற்புற சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையில் விடிய, விடிய நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் இன்று காலை மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாஹல்காம் நகரை ஒட்டியுள்ள அவோரா என்ற கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறையின் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையின் மூன்றாவது ராஷ்டரிய ரைபிள்ஸ் வீரர்கள் அந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டை நேற்று மாலை சுமார் 5 மணியளவில் சுற்றிவளைத்தனர்.
அந்தப் பகுதியை பிறபகுதிகளுடன் இணைக்கும் நாற்புற சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையில் விடிய, விடிய நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் இன்று காலை மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X