என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எமர்ஜென்சி காலத்தை விட மோடி ஆட்சி மோசமாக உள்ளது: மம்தா குற்றச்சாட்டு
Byமாலை மலர்10 Jan 2017 8:08 AM GMT (Updated: 10 Jan 2017 8:08 AM GMT)
1975-ல் இருந்த எமர்ஜென்சி காலத்தை விட மோடி ஆட்சி மோசமாக உள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்
கொல்கத்தா:
ரோஸ்வேலி சிட்பண்டு மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகிறார்.
நேற்று இந்த கட்சி எம்.பி.க்கள். 30 பேர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
ரூபாய் நோட்டு பிரச்சினையில் மோடிக்கு எதிராக நாங்கள் போராடுவதால் எங்கள் கட்சியினரை பழிவாங்குவதற்காக பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு இருக்கிறார். தற்போது சி.பி.ஐ. என்பது இந்திய சதி அமைப்பாக மாறி விட்டது.
நான் 23 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்திருக்கிறேன். எத்தனையோ அரசுகளை பார்த்து இருக்கிறேன். ஆனால், மோடி அரசு போன்று மோசமாக பழிவாங்கும் அரசை பார்த்தது இல்லை. 1975-ல் இருந்த எமர்ஜென்சி காலத்தை விட மோடி ஆட்சி மோசமாக உள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இதில், ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
மத்திய அரசு ரூபாய் நோட்டு பிரச்சினையில் தினமும் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. முதலில் இதை நிறுத்த வேண்டும்.
மோடி அரசின் செயல்பாட்டை கண்டித்து நாடு முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டத்தை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோஸ்வேலி சிட்பண்டு மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகிறார்.
நேற்று இந்த கட்சி எம்.பி.க்கள். 30 பேர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
ரூபாய் நோட்டு பிரச்சினையில் மோடிக்கு எதிராக நாங்கள் போராடுவதால் எங்கள் கட்சியினரை பழிவாங்குவதற்காக பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு இருக்கிறார். தற்போது சி.பி.ஐ. என்பது இந்திய சதி அமைப்பாக மாறி விட்டது.
நான் 23 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்திருக்கிறேன். எத்தனையோ அரசுகளை பார்த்து இருக்கிறேன். ஆனால், மோடி அரசு போன்று மோசமாக பழிவாங்கும் அரசை பார்த்தது இல்லை. 1975-ல் இருந்த எமர்ஜென்சி காலத்தை விட மோடி ஆட்சி மோசமாக உள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இதில், ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
மத்திய அரசு ரூபாய் நோட்டு பிரச்சினையில் தினமும் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. முதலில் இதை நிறுத்த வேண்டும்.
மோடி அரசின் செயல்பாட்டை கண்டித்து நாடு முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டத்தை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X