search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது?: பாராளுமன்ற மந்திரிசபை குழு நாளை ஆலோசனை
    X

    பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது?: பாராளுமன்ற மந்திரிசபை குழு நாளை ஆலோசனை

    பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்ய பாராளுமன்ற மந்திரிசபை குழு நாளை கூடுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி சபைக் குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

    நாளை காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறும். ஆனால் இந்த வரும் ஜனவரி மாத இறுதியில் நடத்த மத்திய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் விதமாக பா.ஜ.க அரசு இந்த கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். இதில் நிதித் துறை மந்திரி அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி ஆனந்த் குமார் உள்ளிட்டோர் இந்த மந்திரி சபைக் குழுவில் உள்ளனர்.

    Next Story
    ×