என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரணியில் கலந்து கொண்ட கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
Byமாலை மலர்1 Jan 2017 2:43 PM GMT (Updated: 1 Jan 2017 2:43 PM GMT)
ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்திற்கு எதிராக அரியானாவில் நடைபெற்ற எதிர்ப்பு பேரணியின்போது கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீசப்பட்டது.
ரோஹத் (ஹரியானா):
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து அரியானா மாநிலத்தில் உள்ள ரோஹத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி நடத்தினார்கள். இதில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் ஷூவை தூக்கி கெஜ்ரிவாலை நோக்கி வீசினார். ஆனால் ஷூ அவர் மீது படாமல் மேடையில் விழுந்தது. உடனடியாக அங்கிருந்தது ஆம் ஆத்மி தொண்டர்கள் விகாஸை சூழ்ந்து தாக்குதல் நடத்தினார்கள்.
அந்நேரத்தில் போலீசார் தொண்டர்களிடம் இருந்து விகாஸை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘மோடி ஒரு கோழை என்று நான் சொல்கிறேன். இன்று சில மோடி ஆதரவாளர்கள் என் மீது ஷூவை தூக்கி எறிந்தார்கள். மோடி அவர்களே, எங்களாலும் இதைச் செய்ய முடியும். எங்களுடைய கலாச்சார மதிப்பு இதுபோன்ற செயலை செய்ய விடவில்லை.
உங்களுடைய சி.பி.ஐ. சோதனை, ஷூ தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மீறி பண ஒழிப்பு ஊழலுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவேன்’’ என்றார்.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து அரியானா மாநிலத்தில் உள்ள ரோஹத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி நடத்தினார்கள். இதில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் ஷூவை தூக்கி கெஜ்ரிவாலை நோக்கி வீசினார். ஆனால் ஷூ அவர் மீது படாமல் மேடையில் விழுந்தது. உடனடியாக அங்கிருந்தது ஆம் ஆத்மி தொண்டர்கள் விகாஸை சூழ்ந்து தாக்குதல் நடத்தினார்கள்.
அந்நேரத்தில் போலீசார் தொண்டர்களிடம் இருந்து விகாஸை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘மோடி ஒரு கோழை என்று நான் சொல்கிறேன். இன்று சில மோடி ஆதரவாளர்கள் என் மீது ஷூவை தூக்கி எறிந்தார்கள். மோடி அவர்களே, எங்களாலும் இதைச் செய்ய முடியும். எங்களுடைய கலாச்சார மதிப்பு இதுபோன்ற செயலை செய்ய விடவில்லை.
உங்களுடைய சி.பி.ஐ. சோதனை, ஷூ தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மீறி பண ஒழிப்பு ஊழலுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X