search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிகரமாக ‘அக்னி-5’ பரிசோதனை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து
    X

    வெற்றிகரமாக ‘அக்னி-5’ பரிசோதனை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து

    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து சென்று தாக்கக்கூடிய கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று பரிசோதித்ததற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 50 டன் எடையுடன் 17 மீட்டர் நீளம் கொண்ட 'அக்னி–5' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி–5' ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று காலை 11.05 மணியளவில் 'அக்னி–5' ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் 'அக்னி–5' பாய்ந்து தாக்கி, அழித்ததாக இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வெற்றிகரமான பரிசோதனைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற பரிசோதனைகள் இந்தியாவின் ஆற்றலையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, கடந்த 19-4-2012, 15-9-2013 மற்றும் 31-1-2015 ஆகிய நாட்களிலும் இதே இடத்தில் இருந்து மூன்று ‘அக்னி-5’ ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×