என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருப்புப் பண ஒழிப்பு போரில் இருந்து பின்வாங்க மாட்டேன்: பிரதமர் மோடி சூளுரை
Byமாலை மலர்25 Dec 2016 9:03 AM GMT (Updated: 25 Dec 2016 9:03 AM GMT)
கருப்புப் பணத்தை ஒழிக்கும் போராட்டத்தில் வெற்றி பெறும்வரை இந்தப் போரில் இருந்து பின்வாங்க மாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ’மான் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக பொதுமக்களுடன் தொடர்புகொண்டு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்தின் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்னும் இந்தப் போர் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி கிடையாது. இந்தப் போரை நாம் வென்றேதீர வேண்டும். இது சுலபமான போர் அல்ல. எனினும், 125 கோடி மக்கள் பக்கபலமாக இருப்பதால் வெற்றிபெறும் வரை இந்தப் போரில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு அரசு தனது நிலைப்பாட்டில் அடிக்கடி மாற்றங்களை செய்து வருவதை பலர் குறை கூறுகின்றனர். மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு என்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க அவ்வப்போது சில மாற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இந்த நடவடிக்கையில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என வெளியாகிவரும் வதந்திகள் அனைத்தும் தவறானவை.
இந்த முதல்கட்ட நடவடிக்கையை தொடர்ந்து பினாமி சொத்துகள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ’மான் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக பொதுமக்களுடன் தொடர்புகொண்டு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்தின் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்னும் இந்தப் போர் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி கிடையாது. இந்தப் போரை நாம் வென்றேதீர வேண்டும். இது சுலபமான போர் அல்ல. எனினும், 125 கோடி மக்கள் பக்கபலமாக இருப்பதால் வெற்றிபெறும் வரை இந்தப் போரில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு அரசு தனது நிலைப்பாட்டில் அடிக்கடி மாற்றங்களை செய்து வருவதை பலர் குறை கூறுகின்றனர். மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு என்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க அவ்வப்போது சில மாற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இந்த நடவடிக்கையில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என வெளியாகிவரும் வதந்திகள் அனைத்தும் தவறானவை.
இந்த முதல்கட்ட நடவடிக்கையை தொடர்ந்து பினாமி சொத்துகள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X