என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டு: சுப்ரீம் கோர்ட்டு
Byமாலை மலர்9 Dec 2016 8:51 AM GMT (Updated: 9 Dec 2016 8:51 AM GMT)
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:
காவிரி நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதோடு தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நீர் போதாது கூடுதலாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முறையிட்டது.
காவிரி நடுவர் மன்றம் 2007-ல் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.
இதை தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளும் மனு தாக்கல் செய்தன.
இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வா ராய், ஏ.எம்.கன் வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா? என விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா சார்பில் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க கர்நாடகாவும், மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தன.
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 19-ந்தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு 2 நாட்கள் அவகாசத்துக்கு பிறகு எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்து கர்நாடகா, மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
வழக்கின் கூடுதல் உத்தரவுகள் டிசம்பர் 15-ந்தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அன்று வரை அதாவது டிசம்பர் 15-ந்தேதி வரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நடுவர்மன்ற தீர்ப்பில் திருத்தம் கோரும் தமிழக அரசின் மனு குறித்து டிசம்பர் 15-ந்தேதி முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
காவிரியில் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 8 வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதோடு தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நீர் போதாது கூடுதலாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முறையிட்டது.
காவிரி நடுவர் மன்றம் 2007-ல் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.
இதை தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளும் மனு தாக்கல் செய்தன.
இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வா ராய், ஏ.எம்.கன் வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா? என விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா சார்பில் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க கர்நாடகாவும், மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தன.
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 19-ந்தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு 2 நாட்கள் அவகாசத்துக்கு பிறகு எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்து கர்நாடகா, மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
வழக்கின் கூடுதல் உத்தரவுகள் டிசம்பர் 15-ந்தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அன்று வரை அதாவது டிசம்பர் 15-ந்தேதி வரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நடுவர்மன்ற தீர்ப்பில் திருத்தம் கோரும் தமிழக அரசின் மனு குறித்து டிசம்பர் 15-ந்தேதி முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
காவிரியில் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 8 வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X