search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு மிகப்பெரிய தோல்வி: கெஜ்ரிவால்
    X

    ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு மிகப்பெரிய தோல்வி: கெஜ்ரிவால்

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மிகப்பெரிய தோல்வி என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் அறிவித்ததில் எந்த பலனும் இல்லை. இதுவரை ஒரு பைசா கூட கருப்பு பணம் வரவில்லை.

    50 நாட்கள் பொருத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் இதுவரை 1 மாதம் முடிந்துவிட்டது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மிகப்பெரிய தோல்வியாகும். இதில் ஊழல் தான் நடந்துள்ளது. ரூபாய் நோட்டு மாற்றிய பணம் வராக்கடனுக்குதான் போய் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×