search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்
    X

    ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்

    மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

    அண்டவெளியை பயன்படுத்துவது தொடர்பாக ஆப்கானிஸ்தான்-இந்தியா இடையிலான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புனே மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    இதுதவிர, 1000 கோடி ரூபாய் செலவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்குவது தொடர்பான தேர்தல ஆணைய திட்டத்திற்கும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
    Next Story
    ×