search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா வரும் 500 கிலோ எடை கெய்ரோ பெண்: விசாவிற்கு உதவிய சுஷ்மா சுவராஜ்
    X

    இந்தியா வரும் 500 கிலோ எடை கெய்ரோ பெண்: விசாவிற்கு உதவிய சுஷ்மா சுவராஜ்

    500 கிலோ எடை கொண்ட கெய்ரோ பெண் இந்தியா வருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார்.
    புதுடெல்லி:

    எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார்.

    இதன் மூலம் உலகின் மிக குண்டான பெண் என கருதப்படுகிறார். உடல் எடை தொடர்ந்து அதிகரித்ததால் அவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். 25 ஆண்டுகளாக தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். உணவு சாப்பிடுதல் உள்ளிட்ட அவரது தேவைகளுக்கு தாயும், தங்கையும் உதவி வருகின்றனர்.

    தொடக்கத்தில் யானைக் கால் நோய் இவரை தாக்கியது. அதன் கிருமிகள் உடல் முழுவதும் பரவி எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இவரது உடலில் உள்ள சுரப்பிகள் சரிவர வேலை செய்யவில்லை அதனால் தான் உடல் மிகவும் குண்டாகிவிட்டது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    500 கிலோ எடை கொண்ட கெய்ரோ பெண் இமான் அகமது இந்தியா வருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார்.

    கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சுஷ்மா சுவராஜ் இந்த உதவியை செய்துள்ளார். முன்னதாக, மும்பையை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர், இமான் அகமது இந்தியா வருவதற்கு உதவுமாறு சுஷ்மா சுவராஜை கேட்டுக் கொண்டுக் கொண்டார்.

    இதனையடுத்து 500 கிலோ எடை கொண்ட பெண்மணி இந்தியா வருவதற்கு சுஷ்மா சுவராஜ் தலையீட்டை அடுத்து விசா கிடைத்துள்ளது.
    Next Story
    ×