என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா வரும் 500 கிலோ எடை கெய்ரோ பெண்: விசாவிற்கு உதவிய சுஷ்மா சுவராஜ்
Byமாலை மலர்7 Dec 2016 12:34 AM GMT (Updated: 7 Dec 2016 12:34 AM GMT)
500 கிலோ எடை கொண்ட கெய்ரோ பெண் இந்தியா வருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார்.
புதுடெல்லி:
எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார்.
இதன் மூலம் உலகின் மிக குண்டான பெண் என கருதப்படுகிறார். உடல் எடை தொடர்ந்து அதிகரித்ததால் அவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். 25 ஆண்டுகளாக தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். உணவு சாப்பிடுதல் உள்ளிட்ட அவரது தேவைகளுக்கு தாயும், தங்கையும் உதவி வருகின்றனர்.
தொடக்கத்தில் யானைக் கால் நோய் இவரை தாக்கியது. அதன் கிருமிகள் உடல் முழுவதும் பரவி எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இவரது உடலில் உள்ள சுரப்பிகள் சரிவர வேலை செய்யவில்லை அதனால் தான் உடல் மிகவும் குண்டாகிவிட்டது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
500 கிலோ எடை கொண்ட கெய்ரோ பெண் இமான் அகமது இந்தியா வருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார்.
கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சுஷ்மா சுவராஜ் இந்த உதவியை செய்துள்ளார். முன்னதாக, மும்பையை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர், இமான் அகமது இந்தியா வருவதற்கு உதவுமாறு சுஷ்மா சுவராஜை கேட்டுக் கொண்டுக் கொண்டார்.
இதனையடுத்து 500 கிலோ எடை கொண்ட பெண்மணி இந்தியா வருவதற்கு சுஷ்மா சுவராஜ் தலையீட்டை அடுத்து விசா கிடைத்துள்ளது.
எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார்.
இதன் மூலம் உலகின் மிக குண்டான பெண் என கருதப்படுகிறார். உடல் எடை தொடர்ந்து அதிகரித்ததால் அவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். 25 ஆண்டுகளாக தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். உணவு சாப்பிடுதல் உள்ளிட்ட அவரது தேவைகளுக்கு தாயும், தங்கையும் உதவி வருகின்றனர்.
தொடக்கத்தில் யானைக் கால் நோய் இவரை தாக்கியது. அதன் கிருமிகள் உடல் முழுவதும் பரவி எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இவரது உடலில் உள்ள சுரப்பிகள் சரிவர வேலை செய்யவில்லை அதனால் தான் உடல் மிகவும் குண்டாகிவிட்டது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
500 கிலோ எடை கொண்ட கெய்ரோ பெண் இமான் அகமது இந்தியா வருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார்.
கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சுஷ்மா சுவராஜ் இந்த உதவியை செய்துள்ளார். முன்னதாக, மும்பையை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர், இமான் அகமது இந்தியா வருவதற்கு உதவுமாறு சுஷ்மா சுவராஜை கேட்டுக் கொண்டுக் கொண்டார்.
இதனையடுத்து 500 கிலோ எடை கொண்ட பெண்மணி இந்தியா வருவதற்கு சுஷ்மா சுவராஜ் தலையீட்டை அடுத்து விசா கிடைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X