search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தாவில் புதிய ரூ.2000 நோட்டுகளுடன் பா.ஜ.க. பிரமுகர் கைது
    X

    கொல்கத்தாவில் புதிய ரூ.2000 நோட்டுகளுடன் பா.ஜ.க. பிரமுகர் கைது

    மேற்கு வங்க மாநிலத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் பா.ஜ.க. பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கொல்கத்தா:

    நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து, அவற்றை மாற்றுவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது. இதனால் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.

    இதனிடையே முறைகேடாக, ஆதாரம் இல்லாமல் பணம் வைத்திருக்கும் பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் பா.ஜ.க. பிரமுக உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ராணிகஞ்ச் தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட மகேஷ் சர்மா என்பவர் பிடிபட்டுள்ளார்.

    மகேஷ் சர்மா உள்ளிட்ட 7 பேரிடம் இருந்து 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஆயுதங்கள் பிடிபட்டன. இவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
    Next Story
    ×