என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர்
Byமாலை மலர்6 Dec 2016 1:50 PM GMT (Updated: 6 Dec 2016 1:50 PM GMT)
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நியமிக்கப்பட உள்ளார். அவரது பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
புதுடெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூன் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு இன்று பரிந்துரை செய்துள்ளார். அவர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தில், நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி கூறியுள்ளார்.
எனவே, அவரது பரிந்துரையின்படி நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார். இதன்மூலம் 44-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் ஜெகதீஷ் சிங் கேஹர். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜனவரி 4-ம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஜனவரி 4-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் சீக்கிய நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூன் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு இன்று பரிந்துரை செய்துள்ளார். அவர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தில், நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி கூறியுள்ளார்.
எனவே, அவரது பரிந்துரையின்படி நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார். இதன்மூலம் 44-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் ஜெகதீஷ் சிங் கேஹர். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜனவரி 4-ம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஜனவரி 4-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் சீக்கிய நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X