என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா உடலுக்கு மாநில முதல்வர்கள் அஞ்சலி
Byமாலை மலர்6 Dec 2016 9:38 AM GMT (Updated: 6 Dec 2016 9:41 AM GMT)
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது, ஆளுமை மிக்க தலைவரை தமிழகம் இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இன்று பிற்பகல் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக புதுவை முதல்வர் நாராயணசாமியும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது, ஆளுமை மிக்க தலைவரை தமிழகம் இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இன்று பிற்பகல் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக புதுவை முதல்வர் நாராயணசாமியும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X