search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைனர் பெண்ணை கற்பழித்த மாணவர்கள்: மகாராஷ்டிராவில் கொடுமை
    X

    மைனர் பெண்ணை கற்பழித்த மாணவர்கள்: மகாராஷ்டிராவில் கொடுமை

    மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை கற்பழித்ததாக கல்லூரி மாணவர் உட்பட 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    நாசிக்:

    மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 13 வயது சிறுமியை கல்லூரி மாணவர் ஒருவர் அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதனால், மயங்கி விழுந்த அந்த சிறுமியை கல்லூரி மாணவர் மற்றும் 5 மைனர் மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர் விஷயத்தை வெளியில் சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால் நீண்ட காலமாக இதை வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்த அந்த சிறுமி, நேற்று தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரையும் கைது செய்திருப்பதாக துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

    சிறுமியை அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர் சமூக வலைத்தளத்தில் ஒரு குரூப்பை உருவாக்கியிருப்பதாகவும், அதில் இணைந்துள்ள இந்த மாணவிக்கு ஆபாசமான படங்களை அனுப்பி வசியப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×