என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் பழங்குடியினர் போராட்டத்தால் ரெயில் சேவைகள் பாதிப்பு
Byமாலை மலர்5 Dec 2016 1:42 PM GMT (Updated: 5 Dec 2016 1:42 PM GMT)
அசாம் மாநிலம் கோக்ராஜர் நகரில் பழங்குடியின மக்கள் நடத்திய தீவிர போராட்டம் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
கோக்ராஜர்:
அசாம் மாநிலத்தில் ஆதிவாசி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆதிவாசி தேசிய மாநாட்டுக் கமிட்டி சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி ஆதிவாசி அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்று காலை 6 மணியளவில் கோக்ராஜர் ரெயில் நிலையத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அசாம் மாநிலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பின்னர் துணை கமிஷனர் அவர்களை சமாதானம் செய்தார். மேலும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்துவதற்காக அவர்களின் கோரிக்கையை மாநில அரசு, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். அதன்பிறகே ரெயில் போக்குவரத்து சீரானது.
மேலும், ஆதிவாசி தேசிய மாநாட்டுக் கமிட்டி, தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை துணை கமிஷனர் மூலம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவலுக்கு அனுப்பியுள்ளது.
அசாம் மாநிலத்தில் ஆதிவாசி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆதிவாசி தேசிய மாநாட்டுக் கமிட்டி சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி ஆதிவாசி அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்று காலை 6 மணியளவில் கோக்ராஜர் ரெயில் நிலையத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அசாம் மாநிலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பின்னர் துணை கமிஷனர் அவர்களை சமாதானம் செய்தார். மேலும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்துவதற்காக அவர்களின் கோரிக்கையை மாநில அரசு, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். அதன்பிறகே ரெயில் போக்குவரத்து சீரானது.
மேலும், ஆதிவாசி தேசிய மாநாட்டுக் கமிட்டி, தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை துணை கமிஷனர் மூலம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவலுக்கு அனுப்பியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X