search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அச்சடிப்பு: ஆர்.பி.ஐ.
    X

    புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அச்சடிப்பு: ஆர்.பி.ஐ.

    புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பழைய நோட்டுக்களும் புழகத்தில் இருக்கும் என்று கூறியுள்ளது.
    பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றிற்கு பதிலாக புதிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன. புதிய 500 ரூபாய் நோட்டுக்களும் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகள் வந்த பின்பும் பழைய ரூ.50, ரூ.20 நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும். அவை புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடித்து வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×