என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிவி நிகழ்ச்சியில் தேசவிரோத கருத்து: பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மீது வழக்கு
Byமாலை மலர்3 Dec 2016 4:06 PM GMT (Updated: 3 Dec 2016 4:06 PM GMT)
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது தேசவிரோத கருத்துக்களை தெரிவித்ததாக பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பதான்:
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் மிரா சராய் பகுதியைச் சேர்ந்த பண்டு கான் என்பவர் பதான் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில், நவம்பர் 25-ம் தேதி வெளியான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தேசவிரோத கருத்துக்களை கூறியதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார். இந்த மனுவை டிசம்பர் 14-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
இவ்வழக்கு குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் கூறும்போது, ‘‘நவம்பர் 25-ம் தேதி முன்னணி செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பரூக் அப்துல்லா தேசவிரோத கருத்துக்களை தெரிவித்தார். அவரது கருத்துக்கள் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு செய்யும் வகையில் உள்ளது. வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் இருக்கிறது.
அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உமர் அப்துல்லா, தனது தந்தை இவ்வாறு பேசியதை தடுக்க நினைக்கவில்லை’’ என்று குற்றம்சாட்டினார்.
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் மிரா சராய் பகுதியைச் சேர்ந்த பண்டு கான் என்பவர் பதான் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில், நவம்பர் 25-ம் தேதி வெளியான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தேசவிரோத கருத்துக்களை கூறியதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார். இந்த மனுவை டிசம்பர் 14-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
இவ்வழக்கு குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் கூறும்போது, ‘‘நவம்பர் 25-ம் தேதி முன்னணி செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பரூக் அப்துல்லா தேசவிரோத கருத்துக்களை தெரிவித்தார். அவரது கருத்துக்கள் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு செய்யும் வகையில் உள்ளது. வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் இருக்கிறது.
அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உமர் அப்துல்லா, தனது தந்தை இவ்வாறு பேசியதை தடுக்க நினைக்கவில்லை’’ என்று குற்றம்சாட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X