என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருங்காய தகராறு: 15 வயது சிறுவனை கடத்திக் கொன்ற 4 பேர் கைது
Byமாலை மலர்3 Dec 2016 7:50 AM GMT (Updated: 3 Dec 2016 7:50 AM GMT)
பெருங்காயத்தின் விலையில் 5 ரூபாய் அதிகமாக வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் 15 வயது சிறுவனை கடத்திக் கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:
தென்கிழக்கு டெல்லி, பரத்பூர் அருகே உள்ள மோலர்பந்த் பகுதியில் வசிப்பவர் அசோக். இவரது மகன் இங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தான். 15 வயதாகும் அந்த சிறுவன் கடந்த 23-ம் தேதி தனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஒரு மளிகைக்கடையில் பெருங்காயம் வாங்கச் சென்றான்.
கடைக்காரரான லேக்சந்த் என்பவர் பெருங்காயத்தின் வழக்கமான விலையைவிட 5 ரூபாய் கூடுதலாக வாங்கிக் கொண்டதால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை அசோக், கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்க நினைத்த லேக்சந்தின் மகன்களான கவுரவ் மற்றும் விக்கி ஆகியோர் கடந்த 28-ம் தேதி பள்ளிக்கு சென்ற அந்த சிறுவனை வழிமறித்து பரிதாபாத் பகுதிக்கு கடத்தி சென்றனர்.
தங்களது நண்பரான திபக் என்பவருடன் சேர்ந்து அந்த சிறுவனை சரமாரியாக தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவனை ஒக்லா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதற்கிடையில், மகனை காணாமல் தேடிய அசோக் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். ஒக்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு காரணமான கடைக்காரர் லேக்சந்த், அவரது மகன்கள் கவுரவ், விக்கி மற்றும் திபக்கை போலீசார் கைது செய்து, கொலைவழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தென்கிழக்கு டெல்லி, பரத்பூர் அருகே உள்ள மோலர்பந்த் பகுதியில் வசிப்பவர் அசோக். இவரது மகன் இங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தான். 15 வயதாகும் அந்த சிறுவன் கடந்த 23-ம் தேதி தனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஒரு மளிகைக்கடையில் பெருங்காயம் வாங்கச் சென்றான்.
கடைக்காரரான லேக்சந்த் என்பவர் பெருங்காயத்தின் வழக்கமான விலையைவிட 5 ரூபாய் கூடுதலாக வாங்கிக் கொண்டதால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை அசோக், கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்க நினைத்த லேக்சந்தின் மகன்களான கவுரவ் மற்றும் விக்கி ஆகியோர் கடந்த 28-ம் தேதி பள்ளிக்கு சென்ற அந்த சிறுவனை வழிமறித்து பரிதாபாத் பகுதிக்கு கடத்தி சென்றனர்.
தங்களது நண்பரான திபக் என்பவருடன் சேர்ந்து அந்த சிறுவனை சரமாரியாக தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவனை ஒக்லா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதற்கிடையில், மகனை காணாமல் தேடிய அசோக் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். ஒக்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு காரணமான கடைக்காரர் லேக்சந்த், அவரது மகன்கள் கவுரவ், விக்கி மற்றும் திபக்கை போலீசார் கைது செய்து, கொலைவழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X