search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சனை: சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு டிச. 7-ல் கூடுகிறது
    X

    ரூபாய் நோட்டு பிரச்சனை: சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு டிச. 7-ல் கூடுகிறது

    ரூபாய் நோட்டு பிரச்சனை தொடர்பான சந்திரபாபு தலைமையிலான முதலமைச்சர்கள் வரும் டிசம்பர் 7-ம் தேதி கூடுகிறது.
    விஜயவாடா:

    பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து மக்கள் பணப்புழக்கம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதனிடையே பண மதிப்பிழக்க நடவடிக்கைக்கு பிந்தைய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்வதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான 5 முதலமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

    இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்தக் குழு வரும் டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்து தொடர்பான சவால்கள் குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
    Next Story
    ×