என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க பா.ஜ.க. தலைமை உத்தரவு
Byமாலை மலர்2 Dec 2016 10:26 PM GMT (Updated: 2 Dec 2016 10:27 PM GMT)
எதிர்க்கட்சிகளை சமாளிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டுள்ளது
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற முடியாமல் முடங்கி உள்ளது. இதையடுத்து பா.ஜனதா கட்சி தலைமை தங்களுடைய எம்.பி.க்களுக்கு முக்கிய உத்தரவை நேற்று பிறப்பித்தது. அதில், எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தில் பல முக்கிய மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. எனவே இரு அவைகளையும் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் வரும் வாரம் முழுவதும் பாராளுமன்றத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ரூபாய் நோட்டு முடக்கத்துக்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மம்தா பானர்ஜி எதிர் அரசியல் செய்து வருகிறார். எனவே எதிர்கட்சிகளை சமாளிக்க அனைத்து எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த வாரம் பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறும் என நம்புகிறோம்’ என்றார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற முடியாமல் முடங்கி உள்ளது. இதையடுத்து பா.ஜனதா கட்சி தலைமை தங்களுடைய எம்.பி.க்களுக்கு முக்கிய உத்தரவை நேற்று பிறப்பித்தது. அதில், எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தில் பல முக்கிய மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. எனவே இரு அவைகளையும் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் வரும் வாரம் முழுவதும் பாராளுமன்றத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ரூபாய் நோட்டு முடக்கத்துக்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மம்தா பானர்ஜி எதிர் அரசியல் செய்து வருகிறார். எனவே எதிர்கட்சிகளை சமாளிக்க அனைத்து எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த வாரம் பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறும் என நம்புகிறோம்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X