search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 அழகான குட்டி புலிகளை ஈன்ற தாய் புலி
    X

    3 அழகான குட்டி புலிகளை ஈன்ற தாய் புலி

    மகாராஷ்டிராவில் சித்தார்த் கார்டன் மற்றும் உயிரியல் பூங்காவில் பெங்காலை சேர்ந்த பெண் தாய் புலி ஒன்று 3 அழகான குட்டி புலிகளை ஈன்றது.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாநகராட்சி சித்தார்த் கார்டன் மற்றும் உயிரியல் பூங்காவில் பெங்காலை சேர்ந்த பெண் தாய் புலி ஒன்று இன்று குட்டிகளை ஈன்றது.

    அந்த தாய் புலியின் பெயர் சம்ருதி. மொத்தம் 4 குட்டிகளை அந்த புலி ஈன்றது. அதில் ஒரு குட்டி இறந்தே பிறந்தது. மீதி 3 புலிக் குட்டிகள் உயிருடன் உள்ளன.

    கடந்த நவம்பர் 12-ம் தேதி புலியானது குட்டிகளை ஈன்று விட்டது. ஆனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் தற்போது அந்த மூன்று புலிக் குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாவலரை தவிர வேறு யாரும் அதன் அருகில் செல்வதில்லை.

    ஆண் புலியான சித்தார்த்-க்கும் சம்ருதிக்கு இந்த புலிக் குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புலிக் குட்டிகள் எந்த பாலினம் என்பது தற்போதிலிருந்து இன்னும் 10 நாட்களுக்கு பிறகு தெரியும்.
    Next Story
    ×