search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே முன்பதிவு கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதி: விரைவில் அறிமுகம்
    X

    ரெயில்வே முன்பதிவு கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதி: விரைவில் அறிமுகம்

    பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே முன்பதிவு மைய கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதியை அறிமுகம் செய்ய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    புது டெல்லி:

    ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் பணமில்லா பரிவர்த்தனைகள் மூலம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் ரெயில்வே கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதியை அறிமுகம் செய்ய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளிடம் ரெயில்வே நிர்வாகம் 15,000 ஸ்வைப் மெஷின்களை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆன்லைன் மூலம் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வசதி இருந்தாலும், ரெயில்வே முன்பதிவு மைய கவுண்டர்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×