search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ. இயக்குனர் ஓய்வு: கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிடம் பொறுப்பு ஒப்படைப்பு
    X

    சி.பி.ஐ. இயக்குனர் ஓய்வு: கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிடம் பொறுப்பு ஒப்படைப்பு

    சி.பி.ஐ.க்கு இயக்குனரான அனில் சின்கா இன்று ஓய்வு பெற்றதையடுத்து, கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கொலை, கொள்ளை வழக்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    யாருடைய தலையீட்டுக்கும் இடமளிக்காமல் மிகவும் சுதந்திரமாக செயல்படும் இந்த அமைப்பின் இயக்குனர் அனில் சின்காவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதையடுத்து அவர் வகித்து வந்த பொறுப்புகள், கூடுதல் இயக்குனர் டாகேஷ் அஸ்தானாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தில் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று முன்னர் போலீஸ் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய ராகேஷ் அஸ்தானா இதுவரை சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தார்.
    Next Story
    ×