என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவோர் தப்பமுடியாது: பொருளாதார துறை செயலாளர் எச்சரிக்கை
புதுடெல்லி:
கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுக்களையும் ஒழிக்க மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்துள்ளது. கருப்பு பணம் வைத்திருப்போர் ஏழைகளின் வங்கி கணக்குகள் மூலம் அதை வெள்ளைப்பணமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் இன்று டுவிட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது:-
கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கருப்பு பணத்தை மாற்றுவோரும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் இதில் இருந்து தப்ப முடியாது.
இது தொடர்பாக வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் சோதனைகள் நடத்தி வருகின்றன. தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்