என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
18 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராட்டம்: உலக சுகாதார நிறுவனம்
Byமாலை மலர்30 Nov 2016 12:10 PM GMT (Updated: 30 Nov 2016 12:10 PM GMT)
18 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் உயிருக்குப் போராடி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா:
ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 18 மில்லியன் மக்கள் ரெட்ரோவைரல் தடுப்பு மருந்து மூலம் எயிட்ஸ் நோயை எதிர்த்துப் போராடி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "உலகம் முழுவதும் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பாதிபேர் தாங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலேயே உள்ளனர். இதனால் இவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை முறைகளை பெறாமலே போகின்றனர்.
தங்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதை அறிந்த மக்களில் 80% பேர் அதற்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.
ஹெச்ஐவி தொற்று இருப்பதை வீட்டில் வைத்தே அறிவதற்கான சுய பரிசோதனை கருவிகளை உலக நாடுகளின் அரசுகள் உருவாக்கி, அவை எளிதாகவும், மலிவாகவும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கிரெட் சென் கேட்டுக் கொண்டுள்ளார்.
2005 தொடங்கி 2015-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் உலகளவில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12%-ல் இருந்து 60% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 18 மில்லியன் மக்கள் ரெட்ரோவைரல் தடுப்பு மருந்து மூலம் எயிட்ஸ் நோயை எதிர்த்துப் போராடி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "உலகம் முழுவதும் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பாதிபேர் தாங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலேயே உள்ளனர். இதனால் இவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை முறைகளை பெறாமலே போகின்றனர்.
தங்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதை அறிந்த மக்களில் 80% பேர் அதற்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.
ஹெச்ஐவி தொற்று இருப்பதை வீட்டில் வைத்தே அறிவதற்கான சுய பரிசோதனை கருவிகளை உலக நாடுகளின் அரசுகள் உருவாக்கி, அவை எளிதாகவும், மலிவாகவும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கிரெட் சென் கேட்டுக் கொண்டுள்ளார்.
2005 தொடங்கி 2015-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் உலகளவில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12%-ல் இருந்து 60% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X