என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேச்சுவார்த்தைக்கு தயார் - ஆனால் காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டும்: பாகிஸ்தான்
Byமாலை மலர்25 Nov 2016 3:10 PM GMT (Updated: 25 Nov 2016 3:10 PM GMT)
பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கோட்டு பகுதியில் உரி, சர்ஜிக்கல் தாக்குதல்களை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அத்துமீறல்களில் ஈடுபடுவதாக இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில தினங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் மூன்று பேரும், அதேபோல் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உட்பட 7 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் நேற்று முன்தினம் வலியுறுத்தி இருந்தது,
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் அஜிஸ் பேசுகையில், “எங்களது எல்லையை பாதுகாக்க முழு திறனும் உள்ளது. எக்காரணத்தை கொண்டும் இந்தியாவின் ஆதிக்கத்தை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்” என்று கூறினார்.
இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் ஆசியாவின் அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அஜிஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கோட்டு பகுதியில் உரி, சர்ஜிக்கல் தாக்குதல்களை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அத்துமீறல்களில் ஈடுபடுவதாக இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில தினங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் மூன்று பேரும், அதேபோல் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உட்பட 7 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் நேற்று முன்தினம் வலியுறுத்தி இருந்தது,
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் அஜிஸ் பேசுகையில், “எங்களது எல்லையை பாதுகாக்க முழு திறனும் உள்ளது. எக்காரணத்தை கொண்டும் இந்தியாவின் ஆதிக்கத்தை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்” என்று கூறினார்.
இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் ஆசியாவின் அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அஜிஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X