search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.பி. சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி
    X

    ம.பி. சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கான நேப்பாநகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
    இந்தூர்:

    தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதேபோல், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நேபாநகர் தொகுதிக்கும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதே தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து சாலை விபத்தில் பலியான ராஜேந்திர ஷியாம்லால் டாடு என்பவரின் மகளான மஞ்சு டாடு என்பவர் இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அண்ட்டர் சிங் பர்டே போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் மஞ்சு டாடு வெற்றிபெற்றதாக அம்மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
    Next Story
    ×