என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரியுடன் அவசர ஆலோசனை
Byமாலை மலர்2 Nov 2016 3:48 AM GMT (Updated: 2 Nov 2016 3:48 AM GMT)
இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரியுடன் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடத்திய பீரங்கி தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரி பாரிக்கருடன் நேற்று இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி நிலைமை குறித்து டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் மற்றும் பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, அத்துமீறி எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பதிலடி நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விரிவாக மத்திய மந்திரிகளிடம் எடுத்துக் கூறினர்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடத்திய பீரங்கி தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரி பாரிக்கருடன் நேற்று இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி நிலைமை குறித்து டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் மற்றும் பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, அத்துமீறி எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பதிலடி நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விரிவாக மத்திய மந்திரிகளிடம் எடுத்துக் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X