search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு ஜூன் மாதம் தொடங்கும்: மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
    X

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு ஜூன் மாதம் தொடங்கும்: மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு அடுத்த ஆண்டு (2017) முதல் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய பணியாளர் தேர்வு வாரியம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளை கொண்ட இந்த தேர்வு 3 வருடங்களாக ஆகஸ்டு மாதம் நடைபெற்று வந்தது.

    அடுத்த ஆண்டு (2017) முதல் இந்த தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இந்த மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த ஆண்டு முதல்நிலை தேர்வு ஜூன் 18-ந் தேதி நடக்கிறது.

    Next Story
    ×