என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 தொகுதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
Byமாலை மலர்27 Oct 2016 11:46 AM GMT (Updated: 27 Oct 2016 11:46 AM GMT)
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும், காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
5 முனைப் போட்டி நிலவும் நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டெல்லியில் கட்சி தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டது. தஞ்சாவூர் தொகுதியில் எம்.எஸ்.ராமலிங்கம், அரவக்குறிச்சில் எஸ்.பிரபு, திருப்பரங்குன்றத்தில் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும், காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
5 முனைப் போட்டி நிலவும் நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டெல்லியில் கட்சி தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டது. தஞ்சாவூர் தொகுதியில் எம்.எஸ்.ராமலிங்கம், அரவக்குறிச்சில் எஸ்.பிரபு, திருப்பரங்குன்றத்தில் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X