search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாம்பியா மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்: குஜராத்தில் பரபரப்பு
    X

    ஜாம்பியா மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்: குஜராத்தில் பரபரப்பு

    குஜராத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜாம்பியா நாட்டு இளம்பெண் தூக்கில் பிணமாகத் தொங்கிய சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அகமதாபாத்:

    தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தவர் முலாயா ஸுக்கா சயாகாவுபா(20). குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு பயின்றபடி இங்குள்ள நீலிமா சொசைட்டி குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை சயாகாவுபாவை சந்திக்க சென்ற ஒரு தோழி தூக்கில் அவர் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுகர் (Sugar) என்ற பெயரில் ஒருவருடன் சயாகாவுபா அடிக்கடி பேசி வந்ததாகத் அவரது கைப்பேசி மூலம் போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. டெல்லியில் உள்ள ஜாம்பியா நாட்டு உயர் தூதருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×