என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாத சம்பளம் பெறுவோருக்கு வரி பிடித்தம் பற்றி எஸ்.எம்.எஸ். தகவல் சேவை: அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்25 Oct 2016 12:22 AM GMT (Updated: 25 Oct 2016 12:22 AM GMT)
மாத சம்பளம் பெறுவோருக்கு வரி பிடித்தம் பற்றி எஸ்.எம்.எஸ். தகவல் சேவையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்
புதுடெல்லி:
நாடு முழுவதும் சுமார் 2½ கோடி மாத சம்பளதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வரி பிடித்தம் (டி.டி.எஸ்.) செய்வது பற்றி செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் சேவையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இச்சேவையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மாத சம்பளதாரர்கள், வரி பிடித்தம் பற்றிய எஸ்.எம்.எஸ். தகவலையும், தங்களது சம்பள ரசீதையும் ஒப்பிட்டு பார்த்து, சரியாக வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியலாம். ஏதேனும் முரண்பாடு இருந்தால், வரியை பிடிக்கும் தங்களது நிறுவனத்தை அணுகி கேட்கலாம்’ என்றார்.
இதுபோல், மாத சம்பளதாரர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரியை, வருமான வரித்துறையிடம் செலுத்த தவறும் நிறுவனங்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட உள்ளது. உரிய தேதியில் வரியை செலுத்துமாறு அதில் அறிவுறுத்தப்படும்.
விரைவில், இந்த சேவையை மாதாந்திர அடிப்படையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அளிக்க உள்ளது. அத்துடன், மாத சம்பளதாரர்கள் அல்லாத, இதர 4 கோடியே 40 லட்சம் பேருக்கும் இச்சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 2½ கோடி மாத சம்பளதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வரி பிடித்தம் (டி.டி.எஸ்.) செய்வது பற்றி செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் சேவையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இச்சேவையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மாத சம்பளதாரர்கள், வரி பிடித்தம் பற்றிய எஸ்.எம்.எஸ். தகவலையும், தங்களது சம்பள ரசீதையும் ஒப்பிட்டு பார்த்து, சரியாக வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியலாம். ஏதேனும் முரண்பாடு இருந்தால், வரியை பிடிக்கும் தங்களது நிறுவனத்தை அணுகி கேட்கலாம்’ என்றார்.
இதுபோல், மாத சம்பளதாரர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரியை, வருமான வரித்துறையிடம் செலுத்த தவறும் நிறுவனங்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட உள்ளது. உரிய தேதியில் வரியை செலுத்துமாறு அதில் அறிவுறுத்தப்படும்.
விரைவில், இந்த சேவையை மாதாந்திர அடிப்படையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அளிக்க உள்ளது. அத்துடன், மாத சம்பளதாரர்கள் அல்லாத, இதர 4 கோடியே 40 லட்சம் பேருக்கும் இச்சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X