search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீரில் பிடிபி அமைச்சர் அப்துல் ரெஹ்மான் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
    X

    ஜம்மு-காஷ்மீரில் பிடிபி அமைச்சர் அப்துல் ரெஹ்மான் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் அமைச்சர் அப்துல் ரெஹ்மான் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிக்குள் தீவிரவாதிகள் அவ்வவ்போது ஊடுருவி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி அமைச்சர் அப்துல் ரெஹ்மான் வீட்டின் மீது தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர்.

    உள்ளூர் நாளிதழ் தகவலின் படி, பொதுப்பணிகள் துறை அமைச்சர் ரெஹ்மானின் வீட்டின் முன்பு உள்ள காவலர்கள் மையத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

    பிஜ்பெகராவில் உள்ள வீரி கிராமத்தில் உள்ள ரெஹ்மானின் இல்லத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த அக்டோபர் 22-ம் தேதி பிடிபி கட்சி அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×