என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன்: முலாயம் சிங்கை மிரட்டும் அகிலேஷ் யாதவ்
Byமாலை மலர்24 Oct 2016 6:14 AM GMT (Updated: 24 Oct 2016 6:14 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியில் உள்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய அகிலேஷ் யாதவ் முன்வந்துள்ளார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மாநில அமைச்சரவையில் முலாயம் சிங்கின் சகோதரர் சிவபால் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்.
உத்தரப்பிரதேசம் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவபாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி என்பவரின் கட்சியை சமாஜ்வாதி கட்சியுடன் இணைக்க சிவபால் விரும்பினார்.
ஆனால், அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் கட்சியில் இருந்து விலக முயன்றார். அவரை முலாயம்சிங் சமரசம் செய்து வைத்தார்.
மாநில மந்திரிசபையில் சிவபால் பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், வருவாய், மற்றும் கூட்டுறவுத்துறை ஆகியவற்றை வகித்து வந்தார். அந்த பதவிகளை அகிலேஷ் பறித்தார். முக்கியத்துவம் இல்லாத சமூக நலத்துறையை அவருக்கு கொடுத்தார்.
இந்நிலையில், உ.பி. மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோ நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்ததும் வெளியேவந்த மாநில விளையாட்டுத்துறை மந்திரி ராம் கரன் ஆர்யா, மாநில மந்திரிசபையில் இருந்து அகிலேஷ் யாதவின் மாமா சிவபால் யாதவ், நரட் ராய். ஷதாப் பாத்திமா மற்றும் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்து சமாதானப்படுத்த லக்னோ நகரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் வீட்டில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்துக்கு வந்த அகிலேஷ் யாதவ் மற்றும் சிவபால் யாதவ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை கட்டுப்படுத்த இயலாமல் போலீசார் திணறினர்.
இதற்கிடையே, முலாயம் சிங் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் உணர்ச்சிப்பிழம்பாக மாறிய அகிலேஷ் யாதவ், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும், தனது நம்பிக்கைக்கு உரிய நபரை கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் அந்த பதவியில் நியமித்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், ‘கட்சியின் தலைவரான முலாயம் சிங்கின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். தனியாக புதுக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மாநில அமைச்சரவையில் முலாயம் சிங்கின் சகோதரர் சிவபால் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்.
உத்தரப்பிரதேசம் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவபாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி என்பவரின் கட்சியை சமாஜ்வாதி கட்சியுடன் இணைக்க சிவபால் விரும்பினார்.
ஆனால், அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் கட்சியில் இருந்து விலக முயன்றார். அவரை முலாயம்சிங் சமரசம் செய்து வைத்தார்.
மாநில மந்திரிசபையில் சிவபால் பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், வருவாய், மற்றும் கூட்டுறவுத்துறை ஆகியவற்றை வகித்து வந்தார். அந்த பதவிகளை அகிலேஷ் பறித்தார். முக்கியத்துவம் இல்லாத சமூக நலத்துறையை அவருக்கு கொடுத்தார்.
இந்நிலையில், உ.பி. மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோ நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்ததும் வெளியேவந்த மாநில விளையாட்டுத்துறை மந்திரி ராம் கரன் ஆர்யா, மாநில மந்திரிசபையில் இருந்து அகிலேஷ் யாதவின் மாமா சிவபால் யாதவ், நரட் ராய். ஷதாப் பாத்திமா மற்றும் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்து சமாதானப்படுத்த லக்னோ நகரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் வீட்டில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்துக்கு வந்த அகிலேஷ் யாதவ் மற்றும் சிவபால் யாதவ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை கட்டுப்படுத்த இயலாமல் போலீசார் திணறினர்.
இதற்கிடையே, முலாயம் சிங் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் உணர்ச்சிப்பிழம்பாக மாறிய அகிலேஷ் யாதவ், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும், தனது நம்பிக்கைக்கு உரிய நபரை கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் அந்த பதவியில் நியமித்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், ‘கட்சியின் தலைவரான முலாயம் சிங்கின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். தனியாக புதுக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X