என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்டு பறவை நோய் தாக்கி பலி: ராஜஸ்தானில் பறவை காய்ச்சல் பீதி
Byமாலை மலர்23 Oct 2016 12:13 PM GMT (Updated: 23 Oct 2016 12:13 PM GMT)
டெல்லியில் காட்டு பறவை ஒன்று நோய் தாக்கி இறந்து கிடந்ததையடுத்து, ராஜஸ்தானில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
ஜெய்பூர்:
வடமாநிலங்களில் தற்போது பறவைகள் இடம் பெயர்வு சீசன் ஆகும். ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
இப்படி இடம் பெயர்ந்து வந்த காட்டு பறவை ஒன்று டெல்லியில் இறந்து கிடந்தது. அதை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அந்த பறவைக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்கி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து டெல்லியில் இருந்து ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டு பறவைகளை பறவை காய்ச்சல் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மார், பிகேனர் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது மற்ற மாநிலங்களில் இருந்து பறவைகள் இடம் பெயர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.
அந்த பறவைகளால் பறவை காய்ச்சல் பரவி விட கூடாது என்பதற்காக ராஜஸ்தானில் உள்ள பறவை சரணாலயங்கள் அனைத்திலும் மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் கோழி பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஜெய்பூரில் உள்ள மிருககாட்சி சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
வடமாநிலங்களில் தற்போது பறவைகள் இடம் பெயர்வு சீசன் ஆகும். ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
இப்படி இடம் பெயர்ந்து வந்த காட்டு பறவை ஒன்று டெல்லியில் இறந்து கிடந்தது. அதை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அந்த பறவைக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்கி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து டெல்லியில் இருந்து ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டு பறவைகளை பறவை காய்ச்சல் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மார், பிகேனர் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது மற்ற மாநிலங்களில் இருந்து பறவைகள் இடம் பெயர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.
அந்த பறவைகளால் பறவை காய்ச்சல் பரவி விட கூடாது என்பதற்காக ராஜஸ்தானில் உள்ள பறவை சரணாலயங்கள் அனைத்திலும் மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் கோழி பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஜெய்பூரில் உள்ள மிருககாட்சி சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X