என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் மிக பழமையான விமானம்தாங்கி கப்பலுக்கு பிரியாவிடை
Byமாலை மலர்23 Oct 2016 10:35 AM GMT (Updated: 23 Oct 2016 10:35 AM GMT)
இந்திய கடற்படையில் சுமார் அரை நூற்றாண்டு காலம் சேவைபுரிந்த மிகவும் பழமையான விமானம்தாங்கி போர்க் கப்பலான ’ஐ.என்.எஸ். விராட்’ க்கு கொச்சி கடற்படை தளத்தில் இருந்து பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருவனந்தபுரம்:
இந்திய கடற்படையில் 55 ஆண்டுகள் சேவைபுரிந்த நாட்டின் மிகவும் பழமையான விமானம்தாங்கி போர்க் கப்பலான ’ஐ.என்.எஸ். விராட்’ க்கு ஓய்வு அளிக்க கடற்படை அதிகாரிகள் தீர்மானித்தனர்.
ஓய்வுக்கு பின்னர் இந்தக் கப்பலை வாங்கி, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திவைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஆந்திர மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. இதை கடற்படை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ’ஐ.என்.எஸ். விராட்’ இன்று மும்பை துறைமுகத்தை நோக்கி தனது இறுதிப் பயணத்தை தொடங்கியது. மூன்று இழுவை கப்பல்கள் அதை இழுத்துச் சென்றபோது, இந்திய கடற்படையின் தென்னக கடற்படை கமாண்டர் ’ரியர் அட்மிரல், நட்கர்னி உள்ளிட்ட உயரதிகாரிகள் பிரியாவிடை தந்து, வழியனுப்பி வைத்தனர்.
இந்திய கடற்படையில் 55 ஆண்டுகள் சேவைபுரிந்த நாட்டின் மிகவும் பழமையான விமானம்தாங்கி போர்க் கப்பலான ’ஐ.என்.எஸ். விராட்’ க்கு ஓய்வு அளிக்க கடற்படை அதிகாரிகள் தீர்மானித்தனர்.
ஓய்வுக்கு பின்னர் இந்தக் கப்பலை வாங்கி, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திவைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஆந்திர மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. இதை கடற்படை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ’ஐ.என்.எஸ். விராட்’ இன்று மும்பை துறைமுகத்தை நோக்கி தனது இறுதிப் பயணத்தை தொடங்கியது. மூன்று இழுவை கப்பல்கள் அதை இழுத்துச் சென்றபோது, இந்திய கடற்படையின் தென்னக கடற்படை கமாண்டர் ’ரியர் அட்மிரல், நட்கர்னி உள்ளிட்ட உயரதிகாரிகள் பிரியாவிடை தந்து, வழியனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X