search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய வீரர் உயிரிழந்தார்
    X

    எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய வீரர் உயிரிழந்தார்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய வீரர் உயிரிழந்தார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைக் காவல் படையை சேர்ந்த வீரரான குர்னாம் சிங் என்பவரது தலையில் பகுதியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததால் படுகாயமடைந்தார்.

    ஜம்மு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மேல்சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் வலியுறுத்திவந்த வேளையில் சிகிச்சை பலனின்றி நேற்று பின்னிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    அர்னியா மாவட்டத்தில் உள்ள பலேஷ்வர் கிராமத்தை சேர்ந்த குர்னாம் சிங் உயிரிழந்த தகவல் வெளியானதும் பலேஷ்வர் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    Next Story
    ×