search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிபுரா சிறையில் இருந்து 3 ஆயுள் தண்டனை கைதிகள் தப்பி ஓட்டம்
    X

    திரிபுரா சிறையில் இருந்து 3 ஆயுள் தண்டனை கைதிகள் தப்பி ஓட்டம்

    திரிபுராவில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 3 தண்டனைக் கைதிகள் தப்பிச் சென்றதையடுத்து அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
    அகர்தலா:

    திரிபுராவின் பிஷால்கர் நகரில் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கைதிகளை அதிகாரிகள் கணக்கெடுத்தபோது, 3 பேரை காணவில்லை. விசாரித்ததில், 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற 3 கைதிகள் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுபற்றி சிறை கண்காணிப்பாளர் கூறும்போது, ‘நேற்று மாலை கணக்கெடுக்கும்போது 3 ஆயுள்தண்டனைக் கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி நேற்று இரவு பிஷால்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இதுபற்றி தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
    Next Story
    ×