என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?
Byமாலை மலர்21 Oct 2016 11:44 PM GMT (Updated: 21 Oct 2016 11:44 PM GMT)
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
புதுடெல்லி:
மாநில கல்வி வாரியத்தை போல மத்திய அரசு வாரியத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த பொதுத்தேர்வு முறை கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது.
பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், அரசின் ஆல்-பாஸ் திட்டத்தாலும் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது. எனவே இந்த பொதுத்தேர்வு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டு முதல் இந்த பொதுத்தேர்வு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
இது தொடர்பாக 25-ந் தேதி மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கூடி விவாதிக்கிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதன் மூலம், மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திப்பதில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மாநில கல்வி வாரியத்தை போல மத்திய அரசு வாரியத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த பொதுத்தேர்வு முறை கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது.
பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், அரசின் ஆல்-பாஸ் திட்டத்தாலும் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது. எனவே இந்த பொதுத்தேர்வு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டு முதல் இந்த பொதுத்தேர்வு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
இது தொடர்பாக 25-ந் தேதி மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கூடி விவாதிக்கிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதன் மூலம், மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திப்பதில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X