என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காதலனை தேடிவந்த இளம்பெண் கற்பழிப்பு: காங்கிரஸ் செயலாளர் கைது
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே உள்ள வட்டியூர்காவு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் அவரது தம்பியும் தாயை இழந்து, தந்தை பராமரிப்பில் இருந்து வந்தனர்.
தந்தைக்கு குடி பழக்கம் இருந்ததால் அவர் தனது பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனால் அந்த இளம் பெண்ணையும் அவரது தம்பியையும் அந்த பகுதியினர் பாலக்காட்டில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். அவர்கள் அங்கு தங்கியிருந்து படித்து வந்தனர்.
அந்த இளம்பெண் மட்டும் திருவனந்தபுரத்தில் உள்ள தனது தாய்வழி பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
அப்போது அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அந்த பெண் விடுதிக்கு சென்றபிறகும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணை திருவனந்தபுரம் வரும்படி காதலன் போனில் அழைத்ததால் அவரும் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
ஆனால் ரெயில் நிலையத்தில் காதலன் காத்திருக்கவில்லை. உடனே அந்த பெண் செல்போனில் தனது காதலனை தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலன் கொடுத்த முகவரிக்கு அவரை தேடி செல்ல முடிவு செய்தார்.
ரெயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்துக்கு சென்ற அவர் அங்கு வல்சலம் (வயது 38) என்பவரின் ஆட்டோவில் ஏறி காதலனின் முகவரிக்கு செல்லும்படி கூறினார். ஆனால் வல்சலம் ஆட்டோவை அந்த முகவரிக்கு ஓட்டாமல் மாறநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு ஓட்டிச் சென்றார்.
அங்கு வைத்து மிரட்டி அந்த பெண்ணை வல்சலம் கற்பழித்தார். பிறகு அவரை ஆட்டோவில் ஏற்றி திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதற்கிடையில் விடுதியில் இருந்து சென்ற பெண் திரும்பி வராததால் விடுதி நிர்வாகிகள் இதுபற்றி பாலக்காடு போலீசில் புகார் செய்தனர்.
அந்த பெண்ணின் போட்டோவை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த பெண் திருவனந்தபுரம் ரெயில்நிலைய பகுதியில் சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் மீட்டு விசாரித்தபோது தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் ஆட்டோ நிறுத்தத்தில் விசாரணை நடத்தி வல்சலத்தை கைது செய்தனர்.
விசாரணையில் வல்சலம் காட்டாக்கடை பகுதி காங்கிரஸ் செயலாளர் என்பதும் தெரியவந்தது. அவர் இதுபோல வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்