search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரப் பிரதேசத்தில் செல்போன் திருடிய வாலிபர்களுக்கு பெட்ரோல் ஊசி போட்டு சித்ரவதை
    X

    உத்தரப் பிரதேசத்தில் செல்போன் திருடிய வாலிபர்களுக்கு பெட்ரோல் ஊசி போட்டு சித்ரவதை

    உத்தரப் பிரதேசத்தில் செல்போன் திருடிய வாலிபர்களுக்கு பெட்ரோல் ஊசி போட்டு சித்ரவதை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    காசியாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரிஸ்வான் என்பவர் பால் பொருள்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது விலை உயர்ந்த செல்போன் திருட்டு போய்விட்டது.

    பக்கத்து கடையில் வேலை பார்க்கும் வாலிபர்கள் மீது ரிஸ்வானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வாலிபர்கள் ஜாகீர் பெய்கி, குல்சர், பிமோ, பைரோஸ் ஆகிய 4 பேரையும் தனது கடைக்கு வரவழைத்து விசாரித்தார்.

    4 பேரும் மறுத்ததால் அவர்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். பின்னர் ரிஸ்வான் தனது பைக்கில் இருந்து பெட்ரோல் பிடித்து வந்தார். அதை ஊசி மூலம் 4 வாலிபர்களின் மர்ம உறுப்பில் செலுத்தினார். வலியால் அவர்கள் துடித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக ரிஸ்வான் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×