search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருத்திக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி
    X

    பருத்திக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி

    புனே நகரம் சக்கன் பகுதியில் பருத்திக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சக்கன் நகர் அருகே பருத்திக்கிடங்கு ஒன்றில் இன்று காலை 10 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பணியில் இருந்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக பலியாகினர்.

    இதுகுறித்து சக்கன் பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் "தொழிலாளர்கள் பணியில் இருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த பெரும்பாலோனோர் தப்பி விட்டனர். எனினும் ஐந்து பேர் தப்பிக்க வழியின்றி இறந்து விட்டனர்" என்றார்.

    இந்த விபத்து குறித்து சக்கன் பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பருத்திக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

    Next Story
    ×