என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவனந்தபுரம் அருகே 16 வயது சிறுமியை பாழடைந்த வீட்டில் அடைத்து கற்பழிப்பு: வெல்டிங் தொழிலாளி கைது
Byமாலை மலர்20 Oct 2016 5:39 AM GMT (Updated: 20 Oct 2016 5:39 AM GMT)
திருவனந்தபுரம் அருகே 16 வயது சிறுமியை பாழடைந்த வீட்டில் அடைத்து கற்பழித்த வெல்டிங் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தை அடுத்த போத்தங்காடு, வட்டப்பாறை பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இச்சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமானார். அவர், எங்கே சென்றார்? என்பது தெரியாமல் பதறிப்போன பெற்றோர், இதுபற்றி போத்தங்காடு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். இதில், சிறுமி காணாமல் போன அதே நாளில் அவரது வீடு அருகே உள்ள தொழிற்சாலையில் வெல்டிங் வேலை பார்த்த அருண் (வயது 26) என்ற தொழிலாளியும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
தொழிலாளி அருண்தான் சிறுமியை கடத்திச் சென்றிருப்பதை அறிந்த போலீசார் இருவரையும் தேடி வந்தனர். அவர்கள் திருவனந்தபுரத்தை அடுத்த சிறையின்கீழ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்று இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை போத்தங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
போலீசாரிடம் சிறுமி கூறும்போது, வெல்டிங் தொழிலாளி அருண், திருமண ஆசைக்காட்டி தன்னை கடத்திச் சென்றதாக கூறினார். பின்னர் பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர், ஜெயிலில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
திருவனந்தபுரத்தை அடுத்த போத்தங்காடு, வட்டப்பாறை பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இச்சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமானார். அவர், எங்கே சென்றார்? என்பது தெரியாமல் பதறிப்போன பெற்றோர், இதுபற்றி போத்தங்காடு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். இதில், சிறுமி காணாமல் போன அதே நாளில் அவரது வீடு அருகே உள்ள தொழிற்சாலையில் வெல்டிங் வேலை பார்த்த அருண் (வயது 26) என்ற தொழிலாளியும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
தொழிலாளி அருண்தான் சிறுமியை கடத்திச் சென்றிருப்பதை அறிந்த போலீசார் இருவரையும் தேடி வந்தனர். அவர்கள் திருவனந்தபுரத்தை அடுத்த சிறையின்கீழ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்று இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை போத்தங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
போலீசாரிடம் சிறுமி கூறும்போது, வெல்டிங் தொழிலாளி அருண், திருமண ஆசைக்காட்டி தன்னை கடத்திச் சென்றதாக கூறினார். பின்னர் பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர், ஜெயிலில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X