search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் அருகே நடுரோட்டில் பெண்ணை கட்டிபிடித்து செக்ஸ் சில்மி‌ஷம்: குமரி தொழிலாளி கைது
    X

    திருவனந்தபுரம் அருகே நடுரோட்டில் பெண்ணை கட்டிபிடித்து செக்ஸ் சில்மி‌ஷம்: குமரி தொழிலாளி கைது

    திருவனந்தபுரம் அருகே நடுரோட்டில் பெண்ணை கட்டிபிடித்து செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட குமரியை சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார்.

    அப்போது அவரை ஒருவர் நைசாக பின்தொடர்ந்து சென்றார். ஆனால் அந்த பெண் அவரை கவனிக்கவில்லை.

    ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் அந்த பெண் சென்றபோது திடீரென்று அவரை கட்டிப்பிடித்து அந்த மர்மநபர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அவரது ஆடையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார்.

    பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். பயத்தில் அலறினார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.

    பொதுமக்கள் வருவதைப் பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே சில வாலிபர்கள் அவரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிறகு அவருக்கு அவர்கள் தர்மஅடி கொடுத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் அந்தோணி (வயது 52). குமரி மாவட்டம் ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    கூலி வேலைக்காக கேரளாவுக்கு சென்ற அந்தோணி தனியாக சாலையில் பெண் நடந்து சென்றதை பார்த்ததும் ஏற்பட்ட சபலத்தில் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு உள்ளார். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×