என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்துக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க புதிய உத்தரவு
Byமாலை மலர்30 Sep 2016 10:13 AM GMT (Updated: 30 Sep 2016 10:13 AM GMT)
காவிரி விவகாரத்தில் உத்தரவுகளை பின்பற்றாத கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புது டெல்லி:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளின் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் இரு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்ட சமரச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம், கர்நாடகம் என இரண்டு தரப்பினரும் மாறி, மாறி தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துரைத்தனர். எனினும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டதால் தீர்வு எதுவும் எட்டப்படாமல் இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் விவாதிக்கப்பட்டது குறித்த அறிக்கையை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. மத்திய அரசின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அக்டோபர் 4-க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் நாளை மாலை 4 மணிக்குள் 4 மாநில அரசுகள் நிபுணர்கள் பெயரை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
மேலும் நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை தமிழகத்துக்கு 6000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், காவிரி விவகாரத்தில் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை என கண்டனம் தெரிவித்தது.
மேலும் 144 பிரிவின்படி நீதிமன்ற உத்தரவை அரசுகள் பின்பற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளின் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் இரு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்ட சமரச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம், கர்நாடகம் என இரண்டு தரப்பினரும் மாறி, மாறி தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துரைத்தனர். எனினும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டதால் தீர்வு எதுவும் எட்டப்படாமல் இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் விவாதிக்கப்பட்டது குறித்த அறிக்கையை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. மத்திய அரசின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அக்டோபர் 4-க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் நாளை மாலை 4 மணிக்குள் 4 மாநில அரசுகள் நிபுணர்கள் பெயரை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
மேலும் நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை தமிழகத்துக்கு 6000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், காவிரி விவகாரத்தில் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை என கண்டனம் தெரிவித்தது.
மேலும் 144 பிரிவின்படி நீதிமன்ற உத்தரவை அரசுகள் பின்பற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X