search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உரியில் தீவிரவாதிகள் தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு
    X

    உரியில் தீவிரவாதிகள் தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு

    உரி தாக்குதலில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஒரு ராணுவ வீரர் மரணம் அடைந்ததையொட்டி பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 18 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் பல வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் ஒரு வீரர் இன்று உயிரிழந்தார். அவரையும் சேர்த்து உரி தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தானுக்குள் புகுந்து நேற்று இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் 55-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    Next Story
    ×